search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ தலைநகர்"

    தென் மாவட்ட மக்களுக்கு மதுரை தான் இனி மருத்துவ தலைநகர் என்றும், இனி மத்திய அரசு பல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வரும் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். #MaduraiAIIMS #Tamilisai
    சென்னை:

    தென் மாவட்ட மக்களுக்கு மதுரை தான் இனி மருத்துவ தலைநகர் என்றும், இனி மத்திய அரசு பல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வரும் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். #MaduraiAIIMS #Tamilisai

    பா.ஜ.க. மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    டெல்லியில் உள்ள எஸ்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர், மத்திய மந்திரிகள் உள்பட பலர் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அரசு மருத்துவமனைக்கு போவதே தவறு என்று இங்குள்ள (தமிழகத்தில்) அரசியல்வாதிகள் நினைத்து கொண்டிருந்தபோது, எய்ம்ஸ் அரசு மருத்துவமனையில் பிரதமர் உள்ளிட்டவர்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மந்திரிகளுக்கு கிடைக்கும் அதே மருத்துவம் தான் ஏழைகளுக்கும் கிடைக்கிறது. இது தான் மத்திய அரசின் விருப்பம். அதே கொள்கையுடன் தான் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்க உள்ளது.

    பா.ஜ.க தலைவர் என்ற முறையிலும், ஒரு மருத்துவர் என்ற முறையிலும், தென் பகுதியை சேர்ந்தவள் என்ற முறையிலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் 18 மாவட்ட மக்கள் பலன் அடைவார்கள். சென்னை எப்படி மருத்துவ தலைநகரமோ? அதேபோல் தென் பகுதி மக்களுக்கு மதுரை தான் இனி மருத்துவ தலைநகரம். இது அனைவருக்கும் பலன் தரும். மருத்துவ மாணவர்களுக்கும் பயன் அளிக்கும்.

    மத்தியில் தி.மு.க.-காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது இந்த திட்டத்தை கொண்டு வர முடிந்ததா?. இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன். பல திட்டங்கள் இனி தமிழகத்திற்கு வரும். மக்களுக்கான அரசாக மத்திய அரசு செயல்படுகிறது.

    இப்போது மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் அந்த பகுதிகள் வளர்ச்சி பெறும். மருத்துவத்திற்காக தென் மாவட்ட மக்கள் இனி சென்னை வர வேண்டியதில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பா.ஜ.க. அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மக்களுடன் கலந்துரையாடி அவர்கள் குறைகளை மனுவாக பெற்று வருகிறோம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் கமலாலயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்’ என்று கூறியுள்ளார். 
    ×